தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாத  14 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16ம் தேதி வரையிலும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.