தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் வெளிநாட்டுனர்களுக்கு திறன் பயிற்சி வழங்கக்கூடிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதால் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் எனவும் விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.