தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீடு போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உரிமைத் தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.