தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய அரசு மற்றொரு வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் அக்டோபர் 18ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம். இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பணம் அக்டோபர் 14ஆம் தேதி வரும் என்று எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்டோபர் 14ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வந்து சேரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதால் அக்டோபர் 16ஆம் தேதியான திங்கட்கிழமை தான் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.