தமிழகத்தில் நாளை மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இந்த மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படும். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ள பயனாளர்களுக்கு பிரத்தியேக ஏடிஎம் கார்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் புகைப்படத்தோடு வலது புறம் திட்டத்தின் பெயரும் இடது புறம் கூட்டுறவு வங்கியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஏடிஎம் கார்டுகளில் உள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ஏடிஎம் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பயனாளிகளுக்கு  படிப்படியாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.