தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் குறி வைத்து பணம் பறிக்க முயற்சிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே வங்கி தரப்பிலிருந்து பேசுவதாக யாராவது செல்போனில் தொடர்பு கொண்டு ஓடிபி நம்பரை கேட்டால் தர வேண்டாம். இந்த திட்டத்திற்காக ஓடிபி எண் எதுவும் கேட்கப்படுவதில்லை. உரிமை தொகை வங்கி கணக்குக்கு வர ஒரு சிலருக்கு தாமதம் ஏற்படலாம் எனவும் அதற்காக யாரும் கவலை அடைய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.