தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணைய கூடாது என்று விசாரணையின் போது அமலாக்கத்துறை கேட்டுள்ளது என வாதம் வைத்துள்ளார்