தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக தொடர்ந்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சில காரணங்களால் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு மறு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்த வரும் பயனாளர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது அமைச்சர் ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மேல்முறையீடு செய்தவர்கள் பயனாளர்களாக இணைக்கப்படும்போது அவர்களுக்கு நான்கு மாத காலத்திற்கான தொகை 4000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.