தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிதாக்குவதற்காக மின்வாரியம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மின் பயனர்களுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் உடனடியாக எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும். தற்போது இதற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செல்போன் செயலி மூலமாக மின் பயன்பாட்டை கணக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மின் இணைப்புகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அது தொடர்பாக புகார் தெரிவிக்கும் வகையில் பிரத்தியேக எண்கள் வழங்கப்பட உள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு மற்றும் மீட்டர் மின்கம்பங்கள் ஆகியவற்றில் ஏதாவது பிரச்சனை என்றால் இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.