தமிழகத்தில் பட்டதாரி மற்றும் முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உபரியான கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் பணிநிறவல் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 27ஆம் தேதிக்கு கடந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த கலந்தாய்வு தற்போது தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.