நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க இவர்கள் தங்கள் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இவ்வளவு வளர்ந்து விட்டார்களா என்று யோசிக்க வைக்கும் வகையில் இருவரின் புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இருமகன்களுக்கும் இதுதான் முதலாவது ஓணம் பண்டிகை என்பதால் அதனை கொண்டாடும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)