சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிக் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகைச்சுவை நடிகர் சந்தானம், தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிக்கான், கூல் சுரேஷ், நடிகை தான்யா ஹோப்,மற்றும் பல்வேறு இயக்குனர் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மன்சூர் அலிகான், சந்திராயன் -3 வெற்றிக்கு பிரதமர் மோடி பெருமைப்பட தேவையில்லை என்று  விமர்சித்துள்ளார்.

கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவன் சந்திராயன் -3 மூலம் நிலவில் காலடி எடுத்து வைத்து சாதனை படைத்துள்ளான். சந்திராயன் -3 வெற்றி பெற்றதில் தமிழன் தான் கெத்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 குறித்து மன்சூர் அலிகான்