கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 47 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கூலி தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த தனது மகனை வெளியே அனுப்பி விட்டு தொழிலாளி 9 வயதுடைய தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தொழிலாளிக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.