உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில் தேசியக் கொடியின் பின்னணியில் 20 ஹிர்வ்னியா மதிப்புள்ள கரன்சியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.