தமிழ் சினிமாவில் முன்னொருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி,கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கி இருந்தார். பொதுவாக தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து நாயகிகளை இறக்குவது போல நடிகை நக்மாவும் ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதன்முதலாக கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். சமீபத்தில் இவரது மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் ஒருவர் போன் செய்து வங்கி அதிகாரி போல பேசி கேஒய்சி புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். சில நிமிடங்களில் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. இது குறித்து தற்போது நக்மா போலீசில் புகார் அளித்துள்ளார்.