நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை போட்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டதால் போதை தலைக்கேறி ஆட்டம் போட துவங்கியுள்ளார். அதுவும் போதையில் சுவாமி பாடலுக்கு பரத நாட்டியம் ஆடியுள்ளார். மேலும் அவர் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக குமாரபாளையம் காவல்துறை உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.

https://twitter.com/jaffermohaideen/status/1670746838973173760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1670746838973173760%7Ctwgr%5E31c4243717afc37c586c8eaaec5f3a6a2981b153%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Ftamil-nadu%2Fdrunken-man-performs-bharatanatyam-on-road-obstructs-motorists-in-kumarapalayam-449914