சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மழை பாதிக்கப்பட்ட இடங்களை மூத்த அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உ த்தரவிட்டுள்ளார். சென்னையிலேயே இருந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சு உள்ளிட்ட அமைச்சர்கள் மழைப் பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும், கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.