தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் சுரேஷை வழிமறித்தனர். மேலும் அவர்கள் ஓட ஓட விரட்டி சுரேஷை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.