திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த தங்கராசுவிடம் ஏன் கோவிலுக்கு செல்லவில்லை என அவரது மகன் வாசு கேட்டுள்ளார்.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாசு கட்டையால் தனது தந்தையை தாக்கினார். இதழ் படுகாயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தங்கராசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.