இன்றைய ‘பொம்மை முதல்வர்’  மு.க.ஸ்டாலின் அவர்கள், திட்டங்களுக்கு வெறும் அழகிய பெயர்களைச் சூட்டுவதில் ஒரு தனி வல்லமை கொண்டவராக இருக்கிறார். ஆனால், அந்த பெயர்களின் கம்பீரமோ, நோக்கத்தின் உன்னதமோ செயலில் ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒரு கவர்ச்சியான பெயர், ஒரு ஆடம்பரமான துவக்க விழா, அதைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான போட்டோஷூட் இவைதான் அவரது ஆட்சியின் திட்டங்களுக்கான செயல்முறையாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த துவக்க விழா புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கையோடு, அந்த திட்டம் அதன் முழு வீச்சையும் இழந்து, கிடப்பில் போடப்பட்டு விடுகிறது. இந்த மாயாஜால ‘போட்டோஷூட்’ ஆட்சியின் அடுத்த பலி, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்.

“>

திட்டத்தின் பெயரில் உள்ள மனிதாபிமான அக்கறை பாராட்டத்தக்கது என்றாலும், அந்த நல்லெண்ணம் வெறும் வார்த்தைகளாகவும், புகைப்படங்களாகவும் மட்டுமே நிலைத்துவிட்டது.

உழைக்கும் வர்க்கமான தூய்மைப் பணியாளர்களின் பசியை ஆற்றும் நோக்குடன் துவக்கப்பட்ட இந்த திட்டம், முதல்வரின் ‘பெயர் வைத்து நிறுத்தும்’ பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறது. பெயரையும் துவக்கத்தையும் மட்டும் வைத்துவிட்டு, அதன் தொடர் செயல்பாட்டையோ, திட்டத்தின் பயனாளிகளுக்கு அது முழுமையாக சென்று சேர்வதையோ உறுதி செய்யத் தவறியது, இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின் மீதான பெரிய கேள்வியாக எழுகிறது.

திட்டங்களை தொடங்குவது போல் ஒரு தோற்றத்தை மட்டும் உருவாக்கிவிட்டு, அதனை செயல்படவிடாமல் கிடப்பில் போடும் இந்த அணுகுமுறை, ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், அவர்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.