திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா? மேலும் அளவுக்கு அதிகமான நபர்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா? போன்றவற்றை போலீசார் கண்காணித்துள்ளனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடு பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.