தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் இதன் விற்பனை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது கடைகள் உள்ளது.

இங்கு மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மூலமாக தினமும் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் தினத்தன்று மட்டும் ரூ.10 1/2 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.