பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2-ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி ஆகிய இடங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்நிலையில் பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது நடைபெற்றபோது நடிகர் ஜெயம் ரவி பேசினார். அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் ஜெயம் ரவி கண் கலங்கினார். அதனை தொடர்ந்து அருகிலிருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா போன்றோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர்.