திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள், பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர் என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விரைவில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளார். இது சமூக ஆர்வலர்களிடையேவும் உலக நாடுகள் இடையேவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.