தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் வினாத்தாள் திருத்தும் பணியில் சரியாக செயல்படாத 1000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.