வாய்க்கொழுப்பு பிடித்த பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எம்ஜிஆர் மறைந்த இத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் நம்முடைய வளர்ச்சி பிடிக்காமல் தீய சக்திகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காமல் ஆ.ராசா அவதூறாக பேசி வருகின்றார். அனைவரையும் வாழ வைத்த பெருமை நம்முடைய தலைவரை சேரும், கருணாநிதி குடும்பம் கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது. எம்ஜிஆர் அவர்கள் முரசொலி மாறன் தயாரிப்பில் எங்கள் தங்கம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கருணாநிதியின் கடனை அடைத்து ஒளி ஏற்றியவர் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.