தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் கொண்டு வர அரசு தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது.

அதனைப் போலவே தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு வரை உள்ளே செல்போன் வைத்திருக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 14ம் தேதியும் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.