கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இதையடுத்து காணொளி வாயிலாக தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் நட்டா திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியபோது, தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். அனைத்து மாவட்ட தலைமையகத்தில் நவீன முறையில் பா.ஜ.க அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்து உள்ளார்.