ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு தொகை சுமார் 25 கோடி 63 லட்சம் ஆகும் எனவும் தமிழக அரசு அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இஸ்லாமிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.