தமிழகத்தில் வருடம் தோறும்  பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம், இலவசம் வேட்டி சேலை, மளிகை பொருட்கள் வழங்கப்படும். அதேபோல நடப்பு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ஆயிரம் பரிசுத்தொகை, 21 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி மற்றும் சேலையை  உரிய முறையில் வழங்குவதற்கு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி சேலை உற்பத்தி செய்யும் பணிகளை வேகப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே ஜனவரி 2ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.