காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக வருகின்ற ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம் சென்னை பாடி லூகாஸ் டிவிஎஸ் டெமிங் ஆடிட்டோரியத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் தொடுக்காடு அஞ்சல் மண்ணூர் டெம்பிள் டிவிஎஸ் டெக்னாலஜி லிட் பயிற்சி அரங்கம் இரண்டில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.

இந்த முகாமில் உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு, ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல். மின் நாமினேசன் தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.