தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பணீர் தற்போது 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே 250 ரூபாயாக இருந்த அரை கிலோ பன்னீர் தற்போது 300 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த 200 கிராம் பன்னீர் 120 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பாதாம் மிக்ஸ் பவுடர் விலை நூறு ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.