சமூக வலைதளத்தில் அவ்வப்போது சில காணொளிகள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்த காணொளிகளில் சிலவை சிரிக்க வைக்கும் படி இருந்தாலும் சிலவை காணொளியில் இருந்தவர்களை பிரச்சனையில் சிக்க செய்யும். அந்த வகையில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் வாலிபரை கட்டி அணைத்து சாலையில் பைக்கில் செல்லும் காணொளி ஒன்று வைரல் ஆனது

டெல்லியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் பைக்கில் சென்றுள்ளார். அவர் பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்து கொண்டு வாலிபரை கட்டி அணைத்தவாறு சாலையில் அந்த பைக் வேகமாக சென்றுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பைக் நம்பர் மூலம் வாலிபரை கண்டுபிடித்த காவல்துறையினர் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய குற்றத்திற்காக அவருக்கு 11,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.