இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் டிராக்டர் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் டிராக்டர்கள் தயாரிப்பில் முதன்மை வகிக்கும் டாபே மற்றும் டிஎம்டிஎல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தமானது சிரமம் இல்லாமல் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் ஆதாயத்தோடு சேர்ந்து எளிய வட்டி விகிதங்களில் டிராக்டர்களை பெற கடன் திட்டத்தைப் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு மற்றும் பிற நபர்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

எனவே டிராக்டர் வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் இந்தியா முழுவதும் 5700 க்கும் அதிகமான கிளைகளைக் கொண்ட வங்கி சேவைகளை வழங்கி வரும் இந்தியன் வங்கியின் எந்த ஒரு கிளைகளிலும் அணுகி அதற்கான நிதி உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.