வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.