சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். செங்கமலப் பட்டியில் உள்ள பட்டாசு ஆடையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.