காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைக்குச் சென்ற ஜெயக்குமார் வீட்டிற்கு வந்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.