தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதால் குவாட்டருக்கு கூடுதலாக ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் டாஸ்மாக்கில் உரிய நேரத்தில் மது விற்கப்படுவதை அரசு உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.