சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.