தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர்  பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார்.

மேலும் மாணிக்கம், கல்யாணசுந்தரம், தர்மராஜ் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் ரூ.10 ஆயிரம் மாத ஊக்கதொகையாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.