தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

இந்த முகாமில் எலும்பு முறிவு டாக்டர் கலைச்செல்வன், காது கேளாதவர்களுக்கான டாக்டர் பாலமுருகன், சமூக நலத்துறை  தாசில்தார் திருமால், மனநல டாக்டர் மங்கையர்க்கரசி, கண் மருத்துவர் காமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தேசிய அடையாள அட்டை 40 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கு 48 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.