கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு 40 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறிது நாட்கள் கழித்து அந்த பெண் தனது தந்தையிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் தனது பேத்தியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த பெண் தனது கணவருடன் தந்தை வீட்டிற்கு சென்று ஏன் எனது மகளை கடத்தி வந்துள்ளீர்கள்? என கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அந்த பெண்ணின் தந்தையும், அவரது சகோதரர்களும் இணைந்து மகளையும், மருமகனையும் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெண்ணின் தந்தை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்