திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பழனி வரட்டாறு பாலம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளமதி, பவித்ரன், கருப்பண்ணன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்