சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 25 அடி ஆழ உறை கிணற்றில் பூனை இறந்து கிடப்பதை பார்த்தார். இதனால் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் தயாளன் கிணற்றில் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டின் கேட்டில் கயிற்றை கட்டி மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கிய தயாளன் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தயாளனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.