கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். அப்போது நுழைவு வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் சாவடிகுப்பத்தைச் சேர்ந்த மாரியப்பனின் மனைவி ராஜகிளி என்பது தெரியவந்தது.

ராஜகிளிக்கு அவரது பெற்றோர் சொத்து கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த ராஜகிளி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் தீக்குளிக்க முயன்றதாக ராஜகிளி மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.