கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக ரமேஷ் குமாருக்கு கோவை செட்டி வீதியைச் சேர்ந்த நகை வியாபாரியான ரகுநாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ரகுநாத் ரமேஷ் குமாரிடம் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஒரு கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை ரமேஷ் குமார் ரகுநாத்திடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் ரகுநாதன் பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து ரமேஷ் குமார் பலமுறை கேட்டுள்ளார். ஆனாலும் ரகுநாத் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ் குமார் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ரகுநாத், உடந்தையாக அவரது மனைவி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.