மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆண்டோ ஹில் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த முஸ்கான் மொஹபத் ஷேக் (5), சஜித் முகமது ஷேக் (7)  என்ற இரண்டு குழந்தைகள் காணாமல் போயினர். இந்த நிலையில் நேற்று நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் காரின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்ட கண்ணாடிகள் கூட திறக்க முடியாததால் குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.