கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளன. அதன்படி நிசர்கா கிராண்ட் ஹோட்டல், இலவச பட்டர் தோசை, நெய் சோறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே பெல்லந்தூரில் உள்ள டெக் ஆப் ப்ரூஸ் மது கடை , ஒரு குவளை பீர் இலவசமாக வழங்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் மதுபான விடுதியை கொண்டுள்ள சோசியல் நிறுவனம் வாக்களித்த மைவிழலை காண்பித்தாள் 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. ரேபிடோ பைக் டாக்ஸி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க செல்ல இலவச சேவையை வழங்குகிறது