ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு பெண் பார்ப்பதற்காக 20 உறவினர்களை தன்னுடைய சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊஞ்சம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருமந்தூர் மேடு காளியம்மன் நகர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் அருண் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.