கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகேஷ்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரம் வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வுடன் இருந்தார். மகளை காணாமல் பதற்றத்தில் இருந்த தாய் சிறுமியிடம் நடந்துவற்றை கேட்டார்.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான நாகேஷ் இரவு வீட்டிற்கு அருகே வந்து தன்னை அழைத்து சென்றதாகவும், களியக்காவிளையில் இருக்கும் லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நாகேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.